குறும்பட இயக்குனருடன் இணையும் நடிகர் விஷால். விஷால் 31 திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை 02 ஏப்ரல் 2021

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் சக்ரா திரைப்படத்திற்கு பிறகு அவருடைய நிறுவனத்தில் தயாரித்து நடிக்கும் அடுத்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

மிக பிரமாண்டமாகவும் அதிக பொருட்செலவிலும் உருவாகும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பை விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் என்பவர் “குள்ள நரிக்கூட்டம்” மற்றும் சமீபத்தில் வெளியாகி பல விருதுகளை பெற்று பலருடைய பாராட்டுக்கள் குவித்த “தேன்” ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அவர் சமீபத்தில் இயக்கிய “எது தேவையோ, அதுவே தர்மம்” குறும்படம் திரைத்துறை உள்ள பிரபலங்கள் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த குறும்படத்தை பார்த்து ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடுத்த திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் து.பா.சரவணன் கொடுத்துள்ளார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இந்த திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகிறது.

விஷால் 31 திரைப்படத்தை அறிமுக இயக்குநர் து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடுவமைப்பு செய்கிறார்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இந்த விஷால் 31 திரைப்படத்தினை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இநத திரைப்படத்தின் முன் தயாரிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷால் 31 திரைப்படத்தை 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.