தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்காததால் மனதளவில் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!
சென்னை 24 ஆகஸ்ட் 2022 தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்காததால் மனதளவில் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!
தனது மகன் அலிகான் துக்லக் கதாநாயகனாக நடிக்க, மன்சூர் அலிகான் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “கடமான்பாறை”.
ஆகஸ்ட் 26-ம் தேதி, வரும் வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட முன்கூட்டியே தீர்மானித்து பத்து லட்ச ரூபாய் செலவில் வெளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார் நடிகர் மன்சூர் அலிகான்.
எதிர்பார்த்தபடி போதிய திரையரங்குகள் கிடைக்காததால் “கடமான்பாறை” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு நாள் பொறுத்தும் பயனில்லயே என நடிகர் மன்சூரலிகான் வேதனை.
இன்று இரவுக்குள் கேட்ட திரையரங்கங்கள் கிடைக்காவிட்டால் OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!











