நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை 20 ஏப்ரல் 2021

நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பூசி பற்றி  சர்ச்சை கருத்து வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பத்மஸ்ரீ விவேக் மரணம் அடைந்த விவகாரத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் வடபழனி காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் தடுப்பு சட்ட உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பூசி போடக்கூடாது என்று நான் சொல்லவில்லை.

தடுப்பூசியை போடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன்’ என்று நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார்.