இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு அணைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தம் –
கொரோனா வைரஸ் பரவுவதால், திரைப்படம், சீரியல் மற்றும் வெப் சிரீஸ் உள்ளிட்ட அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும். என ஆல் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆல் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினர் கூட்டமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், மும்பையில் நடைபெற்றது.
இதில் வருகிற 19-ம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, திரைப்படம், சீரியல் மற்றும் வெப் சிரீஸ் என அனைத்து வகையான பொழுதுபோக்கு படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












