நடிகர் கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.!!
சென்னை 28 நவம்பர் 2022 நடிகர் கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகனை இன்று திருமணம் நடைபெற்றது.!!
நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
தமிழ் திரைப்பட உலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் அறிமுகமானவர்
தமிழ் திரைப்பட உலகில் பிரபலமான நடிகர் கார்த்திக்கின் மகனாக இவர், ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில், கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் தமிழ் திரையுலகில்
அறிமுகமானவர்
‘களத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ திரைப்படத்திலிருந்தே காதலித்ததாக சொல்லப்படுகிறது..
கடந்த நவம்பர் 23-ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கௌதம் கார்த்திக் தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், நேரம் கேட்டு பின் யோசித்து நடிகை மஞ்சிமா மோகன் அவருக்கு பதில் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இருவரும் சென்னையில் இன்று காலை திருமணம் செய்துகொண்டனர்.
இன்று காலை நடைபெற்ற திருமணத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.