நான் நம்ப மாட்டேன், இது பொய்யான செய்தினு சொல்லுங்களேன்: கே.வி. ஆனந்த மறைவு குறித்து நடிகை கார்த்திகா ட்விட்டரில் பதிவு

சென்னை 30 ஏப்ரல் 2021

நான் நம்ப மாட்டேன், இது பொய்யான செய்தினு சொல்லுங்களேன்: கே.வி. ஆனந்த மறைவு குறித்து நடிகை கார்த்திகா ட்விட்டரில் பதிவு

தனது பட இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் அறிந்த நடிகை கார்த்திகா இது பொய்யான தகவல் என்று யாராவது சொல்லுங்களேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

விகடன் நிறுவனத்தில்
பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக இருந்த கே.வி. ஆனந்த் பல்வேறு மொழி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தென்னிந்தியாவின்  வெற்றி பெற்ற ஒளிப்பதிவாளராக இருந்தபோதிலும் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் அந்த வேலையை விட்டார்.

கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். கே.வி. ஆனந்த்.

சென்னை அடையாறில் வசித்து வந்த அவருக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து தானாக சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54.

இன்று காலை எழுந்தவர்கள் கே.வி. ஆனந்தின் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கே.வி. ஆனந்தின் கோ படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகாவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில்…

இது பொய்யான செய்தி என்று யாராவது சொல்லுங்களேன். நான் நம்ப மறுக்கிறேன் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்திகாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, இது பொய்யான செய்தி இல்லை உண்மையே. கே.வி. ஆனந்த் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.