நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை 18 ஜனவரி 2022 நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
தெலுங்கு திரைப்பட உலகில் நடிகை சமந்தா- நடிகர் நாகசைதன்யா ஜோடி சில மாதங்களுக்கு முன்பு தங்கள் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர்.
அது தென்னிந்திய திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் தற்போது வரை பெரும் அதிர்ச்சியாய் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றுமொரு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் விவகாரத்தை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நடிகர் தனுஷ் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.
ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம்.
மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.
தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.”
என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை விட ஒரு வயது மூத்தவர்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022