தமிழக முதல்வருக்கு கவிதையாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குநர் அமீர்.
சென்னை 01 மார்ச் 2022
தமிழக முதல்வருக்கு கவிதையாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குநர் அமீர்.
இதுவரை பொதுவெளியில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லாத நான், ”சமூக நீதிக் காவலரின் வாரிசு”க்கு முதன் முறையாக இதயம் திறந்த வாழ்த்து மடல்.
சூரிய நெருப்பில் உதித்து..
காரிய இருளைத் தகர்த்து..
ஆருடத்தை பொய்யாக்கி
ஆரியத்தை பொடியாக்கி..
ஆட்சிக் கட்டிலை
அடித்தட்டு மக்களுக்கே..
அர்ப்பணித்த
இந்திய முதல்வனே..!
இன்னும் பல காலம் நீயிருக்க
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன் – அது
காலத்தின் தேவை..
சமூக நீதி தழைக்க..
சமய நீதி ஓழிக்க..
சமுதாயம் செழிக்க..
சனநாயகம் சிறக்க..
அன்புடன்
அமீர்
இவ்வாறு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்.
தமிழக முதல்வருக்கு கவிதையாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குநர் அமீர்.@mkstalin@Udhaystalin @directorameer pic.twitter.com/O5o9OrKk8E
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) March 1, 2022











