சென்னை சின்னப்போருர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு நாம் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை 04 ஆகஸ்ட் 2021

சென்னை சின்னப்போருர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு நாம் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தமிழன் சீமான் விடுதலை போராட்ட வீரர் நமது வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றுகின்ற நாள் இன்று.

வீரமிக்க எமது மூதாதைகளில் தீரன் சின்னமலை வித்தியாசமானவர்.

தீரன் சின்னமலை மன்னரோ ,மன்னரின் வாரிசோ இல்லை.

அரசர் அழைத்தால் மக்கள் போரிட வருவார்கள்.

ஆனால் தீரன் சின்னமலை ஒரு சாதாரண குடிமகன்.

அவர் மக்களை ஒன்று திரட்டி படைகட்டி போராடியதுதான் புரட்சி.

அப்படிபட்ட வீரமிக்க எமது பெரும்பாட்டன் தூக்கு கயிற்றை வெள்ளைக்காரன்  கொண்டு வந்தபோது , அவனை தள்ளிவிட்டு தூக்குகயிற்றை தானே மாட்டிக்கொண்டு, நீ என் எதிரி எனக்கு மரணத்தைகூட பரிசாக தரக்கூடாது என்று முழங்கிய பெருந்தகை.

அப்படிப்பட்ட நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவை போற்றுகின்ற இந்நாளில் மானமும் வீரமும் உயிரென நினைக்கின்ற தமிழ்ப் பிள்ளைகள்  தமிழ்ப்பெரும் பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ளபடியே பெருமை அடைகிறோம்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

மேகதாது அணையை கட்ட கர்நாடக பாஜக அரசு தீவிரமாக உள்ள நிலையில், தமிழக பாஜக மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்து போவதாக அறிவித்து நாடகமாடுவதாக கூறிய திரு சீமான் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கு முன்பிருந்தே என்னை உளவு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

இறையன்பு, சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் நம்பிக்கை அளித்தாலும் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகுதான் திமுக அரசின் உண்மை முகம் வெளியே தெரிய வரும் என்றார்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கை வந்த பிறகு அதில் அறிவிக்கப்படும் திட்டங்களை பார்த்த பிறகே அதுப்பற்றி கருத்துக்கூற முடியும்.

எங்களுடைய கொள்கை வேறு.

நாங்கள் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு தற்சார்பு பொருளாதாரம் என்பதை முன்னிறுத்துவதாகவும், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.