பிரின்ஸ் பிக்சர்ஸ்  லஷ்மண் குமார் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் மனு ஆனந்த்.!

சென்னை 13 ஜனவரி 2023 பிரின்ஸ் பிக்சர்ஸ்  லஷ்மண் குமார் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் மனு ஆனந்த்.!

சர்தார், காரி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்ற எஃப் ஐ ஆர் படத்தைத் தந்தவர் இயக்குநர் மனு ஆனந்த்.

கடந்த வாரம் இந்நிறுவனம் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக தரமான திரைப்படங்களைத் தர வித்தியாசமாகவும், மக்களை ஈர்க்கும்படியான கதைகளைத் தரும் இயக்குநர்களை தன் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது பிரின்ஸ் பிக்சர்ஸ்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.