“விலங்கு” வெப் தொடரை இயக்கிய இயக்குனரின் அடுத்தது பான் இந்தியா திரைப்படத்தை இயக்குகிறார்!!

விலங்கு வெப் தொடரை இயக்கிய இயக்குனரின் அடுத்தது பான் இந்தியா திரைப்படத்தை இயக்குகிறார்!!

நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த ‘புரூஸ்லீ’ திரைப்படத்தை இயக்கிய, பிரசாந்த் பாண்டிராஜ் பான் இந்தியா திரைப்படத்தை இயக்குகிறார்.

இவர் புரூஸ் லீ திரைப்படத்திற்கு அடுத்து இயக்கிய ‘விலங்கு’ வெப் தொடர் சூப்பர் சூப்பர் ஹிட்டானது.

இந்த கிரைம் திரில்லர் தொடரை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார்.

இதில் கதாநாயகனாக விமல், இனியா, பாலசரவணன், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ரவி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த வெப் தொடரை அடுத்து இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தியில் உருவாகும் பான் இந்தியா திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அந்த பான் இந்தியா திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் மதன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனமும் இணைந்து இந்த பான் இந்தியா திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

முன்னணி கதாநாயகன் ஒருவரை நடிக்க வைப்பதற்கு அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.