இனிமே தியேட்டர்ல டிக்கெட் எடுக்க முடியாது; அமைச்சர் அதிரடி முடிவு

கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையில் நிலவும் பல குளறுபடிகளை களைய திரைத்துறை சங்கங்கள் முயன்று வருகின்றன.

இதற்காக பல ஆலோசனை கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தியேட்டரில் டிக்கெட் எடுப்பதில் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனிமேல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க முடியாது நிலையை உருவாக்கியுள்ளது.
அதாவது இனிமேல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் எடுக்க வேண்டுமாம்.

இதனால் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அதிகமான விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடியாது.

மேலும் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மட்டுமின்றி விலையையும் அரசு சார்பில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு சேவை கட்டணம் ரூ. 30 இதுவரை உள்ளது. அந்த கட்டணம் குறைக்கப்படுமா? எனத் தெரியவில்லை.