சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ’ விவேக் உடல் அடக்கம் காவல்துறை மரியாதை அளிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை 17 ஏப்ரல் 2021

சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ’ விவேக் உடல் அடக்கம் காவல்துறை மரியாதை அளிக்க தமிழக அரசு உத்தரவு

சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது நடிகர் விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.45 மணிக்கு மரணமடைந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக்குக்கு கௌரவம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து அவரது இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவு செய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது.

தேர்தல் ஆணைய அனுமதி கொடுத்ததை அடுத்து அவரது உடல் காவல்துறை 78 குண்டுகள் முழங்க மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.

என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.