நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு கடந்த சனிக்கிழமை ஒருவர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். இதனையடுத்து, காவல்துறை உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில்⚖, சென்னை சாலிகிராமம் எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள நடிகா் விஜயின் தந்தை சந்திரசேகா் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூரில் உள்ள விஜய் பங்களாவுக்கு ஒரு காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, அந்த பங்களாவை போலீஸாா் சோதனையும் செய்தனா். பின்னர் அந்த அழைப்பு வந்த தொலைப்பேசியில் பேசிய நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அந்த நபா், சென்னை போரூா் அருகே உள்ள ஒரு இளைஞா் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணான பதில்களை தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.