நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குற்றவாளிகள் குறித்து நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குற்றவாளிகள் எப்போது தூக்கிலிட படுவார்கள்  என குறித்து நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் 2012ல் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் தொடர் பரபரப்புகளை ஏற்படுத்தி வந்த வழக்கில் தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டது

குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்தி ”8 வருடங்கள் கழித்து கடைசியாக நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது.

பொள்ளாச்சி சம்பவத்திற்கு எப்போது நீதி கிடைக்கும் என தெரியவில்லை.

ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்டது. நாம் கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறக்கக்கூடாது. பாதுகாப்பாக இருங்கள் எப்போதும்” என பதிவிட்டுள்ளார்.

கார்த்தியின் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் அதை ரீட்வீட் செய்து வருகின்றனர்.