தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கினார் – நடிகர் பிரசாந்த்
சென்னை 29 ஜூன் 2021
தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கினார் – நடிகர் பிரசாந்த்.
தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்த கையோடு நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தை நடிகர் தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பு.
முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்.
மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன்.
முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.
மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்.
கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது.
அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி!
என ஒரு சேர முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்வை முடித்துவிட்டு மீடியாவை சந்தித்த நடிகர் பிரஷாந்தும், நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகங்கொண்ட தியாகராஜனும் தெரிவித்த குறிப்பிடத்தக்கது .











