நடிகை நயன்தாரா கொரோனா வைரஸ் முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டார்்.

சென்னை 19 மே 2021

நடிகை நயன்தாரா கொரோனா வைரஸ் முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டார்

நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுகான தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

முதல் அலையினை காட்டிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாம் அலை தமிழ் நாட்டில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள குமரன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் தவனை போட்டுக் கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!