கொரோனா தொற்று காரணமாக பிரபல காமெடி நடிகர் ஜோக்கர் துளசி காலமானார்.

சென்னை 10 மே 2021

கொரோனா தொற்று காரணமாக பிரபல காமெடி நடிகர் ஜோக்கர் துளசி காலமானார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் காமெடி நடிகர் ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி காலமானார்..

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு என சிலர் இறந்து உள்ளனர்.

அந்த வகையில், தற்போது காமெடி நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.