என்ன சொல்ல போகிறாய் திரை விமர்சனம் ரேட்டிங் –2 /5
நடிகர் நடிகைகள் – அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன், தேஜூ அஷ்வினி அவனதிகா மிஷ்ரா, புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு, சுவாமிநாதன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஹரிப்பிரியா, ஷாலினி சரோஜ், பிரதீப், டி எம் கார்த்திக், இந்துமதி, வைத்தியநாதன் பத்மநாபன், சினேகா குமார், ஜெய், பூஜா, ஸ்ரீநிதி, டாங்கிளி ஜம்போ, வைஷ்ணவி, மற்றும் பலர்.
இயக்கம் – ஹரிஹரன்.
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்.
படத்தொகுப்பு – மதிவதனன்.
இசை – விவேக் – மெர்வின்.
தயாரிப்பு – டிரேட்ண்ட் ஆர்ட்ஸ்.
ரேட்டிங் –2 /5
மேடையில் பேசும் போதோ, பேட்டிகளில் பேசும் போதோ பார்த்துப் பேச வேண்டும்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் நாயகன் அஷ்வின், “40 கதைகளைக் கேட்டு தூங்கிட்டேன்,
இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதித்தேன்,” என்றார்.
இப்போது இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இந்தக் கதையையா அப்படி ஒரு பிரமாதமான கதை எனச் சொன்னீர்கள் என கதாநாயகன் அஷ்வினைக் கேள்வி கேட்டு பல மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ரேடியோ ஜாக்கி வேலை பார்த்து வருகிறார் கதாநாயகன் அஸ்வின் குமார்.
இவருடைய தந்தை அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார்.
பெண் எழுத்தாளர் அவந்திகா மிஷ்ராவுக்கும் திருமணம் பேசப்படுகிறது.
எழுத்தாளராக பணியாற்றி வரும் அவந்திகா மிஸ்ரா கதாநாயகன் அஸ்வின் குமார் இருவரும் சந்தித்துப் பேசும் போது காதலில் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்.
அப்படிப்பட்டஒருவரைக் கல்யாணம் செய்வது சிறந்தது என்கிறார்.
கதாநாயகன் அஸ்வின் குமார் தனக்கு காதல் கதை இருப்பதாகவும் தனது காதலி கதாநாயகி தேஜு அஸ்வினி என்றும் கூறுகிறார்.
கதாநாயகி தேஜு அஸ்வினியை அவந்திகா பார்க்க வேண்டும் என கூறுகிறார்.
கதாநாயகி தேஜு அஸ்வினியுடன் கதாநாயகன் அஸ்வின் குமார் ஒரு டீல் பேசி இருவரையும் சந்திக்க வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகி தேஜு அஸ்வினி மீது காதல் வயப்படுகிறார் கதாநாயகன் அஸ்வின் குமார்.
தனது தாத்தா தனக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் படலத்தில் இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க, கதாநாயகி தேஜுவும் அஸ்வின் குமார் தான் தனது காதலன் என தனது தாத்தா விடம் பொய் சொல்கிறார்.
இறுதியில், கதாநாயகன் அஸ்வின் குமார் தனக்கு பெண் பார்த்த அவந்திகா மிஸ்ராவை திருமணம் செய்தாரா? இல்லையா?காதலிக்க ஆரம்பித்த கதாநாயகி தேஜு அஸ்வினியை திருமணம் செய்தாரா? இல்லையா ? என்பதுதான் இந்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அஸ்வின் குமார் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் அஸ்வின் குமார் காதல் காட்சிகளில் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஸ்வின் குமார் காதல் நடிப்பு வரவழைக்கப்பட்டது போலத்தான் இருக்கிறது.
சென்டிமென்ட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் கதாநாயகன் அஸ்வின்குமார்.
இரண்டு அழகான பெண்கள் காதலிக்கும் போது அப்படியே அடிவயிற்றிலிருந்து நடிப்பு கதாநாயகன் அஸ்வின் குமாருக்கு கரை புரண்டு வர வேண்டாமா ?.
லேசாக சிரித்தாலும், பார்த்தாலும் போதும் அது காதல் என்று கதாநாயகன் அஸ்வின்குமார் நம்பிவிட்டார் போலும்.
40 கதை கதை கேட்டு தூங்கிய கதாநாயகன் அஸ்வின் குமார் இந்த கதையை கேட்டு தூங்காம, இரவெல்லாம் கண் முழித்து, நடித்து, நடித்து நடிப்பு பயிற்சி பெற்றெடுக்கலாம் கதாநாயகன் அஸ்வின் குமார்.
கதாநாயகிகளாக வரும் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் அழகாக வந்து சொன்ன வேலையை செய்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் அவந்திகா மிஷ்ரா, தேஜு அஷ்வினி. அவந்திகா கொஞ்சம் மெச்சூர்டு தோற்றத்தில் இருக்கிறார்.
காதலிக்காமலேயே பல காதல் கதைகளை எழுதி, காதலைப் பற்றிப் புரிந்தவர், தெரிந்தவர் போலப் பேசி கடைசியில் காதலின் வலி என்ன என்பதை தானாக உணர்கிறார்.
அவந்திகா மிஷ்ராவை விட தேஜு அஷ்வினிக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
இருவரும் அழகாகவும் இருக்கிறார் உருக்கும் அளவிற்கு காதல் பார்வை பார்க்கிறார்,
இருவரும் தவிக்கிறார்கள் அழுகிறார்கள். ஆனாலும், இவரது கதாபாத்திரத்தில் இருக்கும் முரண், இவர்கள் மீது அனுதாபத்தை வரவழைக்கவில்லை.
சின்னத்திரை நிகழ்ச்சியில் கைகொடுத்த அஸ்வின் குமார், புகழ் காம்பினேஷன் இந்த திரைப்படத்தில் பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகவில்லை.
புகழ் இந்த திரைப்படத்திலும் சிரிக்க வைக்க முயற்சி செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றுகிறார்.
என்னென்னமோ செய்து பார்க்கிறார் ஆனால், நமக்குத்தான் சிரிப்பு வரவே மாட்டேங்குது
திரைப்படம் என்பது வேறு சின்னத்திரை என்பது வேறு புகழ், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காதல் திரைப்படங்களில் நடிக்கும் புதுமுகங்களிடம் காதல் என்பது இயற்கையாக நடிப்பு அப்படியே வந்து கொட்ட வேண்டும்.
திரைப்படத்தில் பேசுகிறார்கள் பேசுகிறார்கள், பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
பேசாமல் மௌனமாக ஏதாவது ஒரு காட்சியாவது இருந்ததா என்பது பற்றி ஒரு போட்டியே வைக்கலாம்.
மாறி, மாறி யாராவது ஒரு காட்சியில் மூச்சு விடாமல் பேசுகிறார்கள்.
முக்கோண காதல் கதையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் ஹரிஹரன்.
முதல் பாதி கவர்ந்த அளவிற்கு இரண்டாம் பாதி கவரவில்லை.
நிறைய காதல் காட்சிகள் திரைப்படத்தில் வந்தாலும், பெரியதாக மனதில் ஒட்டவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
காட்சிகளில் இடம் பெறும் வசனங்கள் திரைப்படம் பார்க்கவும் நமது மனதில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது.
திரைப்படத்தில் மனமுவந்து தாராளமாகப் பாராட்டலாம் என நினைக்கத் தோன்றும் அளவிற்கு பாராட்டுக்களை அள்ளுபவர் ஒருவர்தான் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் மட்டுமேதான்.
விதவிதமான வண்ணமயமான லைட்டிங்குகள், அற்புதமான கம்போஸிங், ஒவ்வொரு காட்சியையும் ஒரு விளம்பரப் படம் போல படமாக்கியிருக்கிறார்.
விவேக் மெர்வின் இசையில் காதல் பாடல்கள் என கேட்கும் ரகம்.
இசை மற்றும் பின்னணி இசையும் மிக அருமையாக உள்ளது.
முன் பாதி வரை ஓரளவிற்காவது தாக்குப் பிடித்து உட்கார முடிகிறது.
அதற்குப் பின் திரைப்படம் எப்போது முடியும் என தவிப்பு வந்துவிடுகிறது
மொத்தத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் சொல்லாமலே இருந்திருக்கலாம்.