கட்டில் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5/ 5.
நடிகர் & நடிகைகள் :- இ.வி.கணேஷ்பாபு, சிருஷ்டி டாங்கே, கீதா கைலாசம், விதார்த், அன்னம் அரசு, இந்திரா செளந்திரராஜன், கன்னிகா சினேகன், மாஸ்டர் நிதிஷ், ராஜன், சம்பத்ராம், கலைஞர் ஷ்யாம், மெட்டி ஒளி சாந்தி, காதல் கந்தாஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஈ வி கணேஷ் பாபு.
ஒளிப்பதிவாளர் :- வைட் ஆங்கிள் ரவிசங்கரன்.
படத்தொகுப்பாளர் :- லெனின்.பி.
இசையமைப்பாளர் :- ஸ்ரீகாந்த் தேவா.
தயாரிப்பு நிறுவனம் :- பல்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் & மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள் :- ஈ வி கணேஷ்பாபு.
ரேட்டிங் :- 3.5/ 5.
பரம்பரை பரம்பரையாக தன் தாத்தா வாழ்ந்த அரண்மனை வீட்டில் கதாநாயகன் கணேஷ்பாபு மற்றும் மனைவி கதாநாயகி சிருஷ்டி டாங்கே, தாய் கீதா கைலாசம், மகன் மாஸ்டர் நிதிஷ், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த அரண்மனையில் கதாநாயகன் கணேஷ் பாபு தாத்தா காலத்திலிருந்து 250 வருட பழமை வாய்ந்த கட்டில் ஒன்று இருக்கிறது.
இந்த கட்டிலை அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் தன் உயிருக்கு நிகராக வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.
கதாநாயகன் கணேஷ் பாபுவின் வேறு ஊர்களில் வாழும் சகோதர, சகோதரிகள் இந்த பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அரண்மனையை விற்க நினைக்கிறார்கள்.
ஆனால், கதாநாயகன் கணேஷ் பாபு அந்த வீட்டை விற்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
மேலும் கடைசி நிமிடத்தில் தாயும் கதாநாயகன் கணேஷ்பாபு வீட்டை விற்பதற்கு ஒத்துக் கொள்கிறார்கள் ஆனால் இந்த வீட்டில் இருக்கும் பாரம்பரியமான கட்டிலையும் தர மறுக்கிறார்.
இதில் வரும் பங்கு பணத்தை வைத்து அந்த பாரம்பரியமான கட்டில் வைக்கும் அளவிற்கு பெரிய வீடு வாங்க கதாநாயகன் கணேஷ்பாபு நினைக்கிறார்.
ஆனால், அந்தக் கட்டில் வைப்பதற்கு தகுந்தாற்போல் வீடு கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அந்தக் கட்டில் வைக்கும் அளவிற்கு வீடு கிடைக்காததால்
கட்டிலை வேறு இடத்தில் தற்காலிகமாக வைத்து விட்டு புதியதாக பார்க்கும் சிறிய வீட்டிற்கு வாடகைக்கு செல்கிறார்கள்.
இறுதியில் கதாநாயகன் கணேஷ்பாபு சொந்த வீடு வாங்கினாரா? சொந்த வீடு வாங்கவில்லையா? அந்த 29 வருட பாரம்பரியமான கட்டிலை பாதுகாத்தாரா? கட்டிலை பாதுகாக்கவில்லையா? என்பதுதான் இந்த கட்டில் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக கணேஷ் பாபு நடித்திருக்கிறார்.
இந்த கட்டில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கணேஷ்பாபு, தாத்தாவாக, தந்தையாக, மகனாக என மூன்று தலைமுறை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
தான் ஏற்று நடித்திருக்கும் மூன்று கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பிலும் மூலம் வித்தியாசம் காண்பித்து நடித்து இருக்கிறார்.
இந்த கட்டில் திரைப்படத்தில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, கர்ப்பிணி பெண்ணாக திரைப்படம் முழுவதும் நடித்து ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக வரும் கன்னிகா சினேகன், அழகாக வந்து அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விதார்த் சிறிது நேரம் மட்டுமே வந்து ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்.
கதாநாயகன் கணேஷ் பாபுவின் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம் கட்டிலை பாதுகாக்கும் கதாபாக்கத்தில் ராமையா வாக நடித்திருக்கும் இந்திரா செளந்திரராஜன்,
கதாநாயகன் கணேஷ் பாபு சகோதரியாக நடித்திருக்கும் மெட்டி ஒளி சாந்தி, சகோதரராக நடித்திருக்கும் கலைஞர் ஷ்யாம்,
காதல் கந்தாஸ், ராஜன் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் சம்பத்ராம் அன்னம் அரசு, மாஸ்டர் நிதிஷ், இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தெள்ள தெளிவாக அமைந்து இருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பி. லெனின் படத்தொகுப்பு ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது.
இந்தக் கட்டில் திரைப்படத்திற்கு பெரிய பலம் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவின் இசை. பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது.
பின்னணி இசையில் மிகப்பெரிய அளவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஒரு கட்டில் வைத்து கொண்டு முழு கதையை உருவாக்கிய பி லெனின் அவர்கள் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகளவில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
கட்டிலோடு ஒரு மெசேஜையும் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் கணேஷ் பாபு.
இந்த திரைப்படத்தில் மூன்று தலைமுறை கதாநாயகனாக நடித்திருக்கும் கணேஷ்பாபு இந்த கட்டில் திரைப்படத்தை இயக்கி தயாரித்தும் இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் பாபு.
மொத்தத்தில் கட்டில் திரைப்படம் கட்டிலை வைத்து கதை சொல்லி இருப்பது மிகவும் அருமை.