கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு கல்வி நிறுவனங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு

10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என முதலமைச்சர் அறிவிப்பு

மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்

அங்கன்வாடி மையங்கள் அனைத்தும், மார்ச் 31 ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு

ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த கூடாது

திருமணங்களில் ஏராளமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவே மக்கள் பங்கேற்க வேண்டும்

திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுகோள்

ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடை கால பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்த அனுமதி வழங்க கூடாது

அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உள்பட) மார்ச் 31 வரை மூட வேண்டும்

சுற்றுலாப் பயணிகள் தங்கும் ரிசார்ட்டுகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தல்

யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

அனைத்து உத்தரவுகளும் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த உத்தரவு

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு

உயிரியல் பூங்கா, ஜிம் உள்ளிட்ட உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு