செஞ்சி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5/5

நடிகர் நடிகைகள் :- கணேஷ் சந்திரசேகர், க்ஷேன்யா பான்பெரோவா {மாஸ்கோ} யோகிராம்,;ஸ்ரீ ரம்யா, சுஹைஜு கள்ளரா, Dr. சுஜாதா டொரைமணிக்கம், மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார்,மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய் , பேபி தீக்ஷன்யா , மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கணேஷ் சந்திரசேகர்.

ஒளிப்பதிவு :- ஹரிஷ் ஜிண்டே.

படத்தொகுப்பு :- ஆனந்த் ஜெரால்டு – கிருஷ்ணன் உன்னி.

இசையமைப்பாளர் :- எல் வீ முத்து கணேஷ்.

தயாரிப்பு :- ஏலியன் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- கணேஷ் சந்திரசேகர்.

ரேட்டிங் :- 2.5 / 5.

வழக்கமாக தமிழ் திரைப்பட உலகில் புதையலை தேடும் அலிபாபா நாற்பது திருடர்கள் இருந்து இப்பொழுது செஞ்சி வரை பலவிதமான புதைகளை தேடும் கதைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

பத்தாம் நூற்றாண்டில் பதுக்கி வைக்கப்பட்ட புதையல் தேடுதல் சார்ந்த கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் செஞ்சி.

வழக்கமான திரைப்படங்களில் வணிக சூத்திரங்களில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையை எடுத்துக் கொண்டு மிக அருமையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரசேகர்.

பிரான்சில் நாட்டில் இருந்து பாண்டிச்சேரியில் உள்ள தன் மூதாதையர் தங்கியிருந்த வீட்டிற்கு வரும் க்ஷேன்யா பான்பெரோவா தங்குவதற்காக வருகிறார்.

வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது.

ஆனால் க்ஷேன்யா பான்பெரோவா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.

அவற்றை ரசித்து ரசித்துப் பார்க்கிறாள்.

ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது.

எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது.

அங்கு ஒரு அறைக்குள் பழம் காலத்து புராதன கலைப் பொருட்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

பழம் காலத்து புராதன கலைப் பொருட்கள் அவற்றோடு அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள்.

அந்த ஓலைச்சுவடியில் அமானுஷ்யங்களும் ஆவிகளும் நிறைந்து இருக்கின்றன.

அந்த அமானுஷ்யங்களும் ஆவிகளும் உள்ள ஓலைச்சுவடியை எடுத்து கொண்டு தொல் பொருள் ஆராய்ச்சி செய்யும் கதாநாயகன் கணேஷ் சந்திரசேகரிடம் காண்பிக்கிறார்.

அவர் வந்து அதை உற்று நோக்கிய போது அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

அவர் ஓலைச்சுவடியை படித்து புதையல் பற்றிய ரகசிய குறியீடுகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார் கதாநாயகன் கணேஷ் சந்திரசேகர்.

புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து ரகசிய குறியீடுகள் உள்ளதாகக் அந்த ஓலைச்சுவடியில் கூறியுள்ளது.

ரகசிய குறியீடுகளை வைத்து புதையலை தேடி கதாநாயகன் கணேஷ் சந்திரசேகர் மற்றும் க்ஷேன்யா பான்பெரோவா புறப்படுகிறார்கள்.

ஐந்து ரகசிய குறியீடுகளையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்த புதையலை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த செஞ்சி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த செஞ்சி திரைப்படத்தில் கதாநாயகனாக கணேஷ் சந்திரசேகர் நடித்திருக்கிறார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வரும் கதாநாயகன் கணேஷ் சந்திரசேகர் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இவரின் வசன உச்சரிப்பில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.

ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

பிரான்சு நாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக வரும் க்ஷேன்யா பான்பெரோவா கதையோடு ஒன்றியிருக்கிறார்.

கணேஷ் சந்திரசேகரை விட அந்த நடிகை மிகச்சிறப்பாக நடித்து உள்ளார்.

தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது.

திரைப்படத்தில் வரும் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன் மாஸ்டர் தர்சன் குமார் மாஸ்டர் விதேஷ் ஆனந்த் மாஸ்டர் சஞ்சய் பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.

இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷின் இசை அருமையாக அமைத்துள்ளார்.

திரைப்படத்தில் வரும் மூன்று பாடல்கள் தேடல் தேடு என்ற பாடல் திரைப்படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் வரும் போது ஒலிக்கிறது.

வேண்டும் என்ற பாடல் பிறகு வருகிறது.

தங்கப் புதையலைக் கண்டுபிடித்த பிறகு பாடும் இது தங்கம் என்கிற பாடல் சிறுவர்களைக் கவரும்.பாடல் காட்சிகளின் இசையைவிட பின்னணி இசையில் இசையமைப்பாளர் எல். வி. முத்து கணேஷ் பளிச்சிடுகிறார்.

அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டுக்கள்.

ஒரு புதையல் வேட்டை போல் இந்தக் கதை தொடங்குகிறது.

திரைப்படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது .

ஏதோ ஒரு ரகசியம், மனித அறிவுக்குக் கட்டுப்படாத ஒன்று இருப்பதாக நம்மை அழைத்துச் செல்கிறது.

நமது தென்னிந்தியப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத பல இடங்களில் நுழைந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

அதனால்தான் திரைப்படத்தில் அந்த லொகேஷன் ஒரு கதாபாத்திரம் போலவே அமைந்து பார்ப்பவர்கள் மனதில் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறது.

லொகேஷன்களைச் தேர்வு செய்து சரியாகப் பயன்படுத்திய இயக்குநரையும் பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘செஞ்சி’ திரைப்படம் வரலாற்று உணர்வை நினைவூட்டும் ஒரு வணிகப்படம் என்று கூறலாம்.