தலைமைச்செயலகம் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜி.வசந்தபாலன்.
ஒளிப்பதிவாளர் :- வைட் ஆங்கிள் ரவிசங்கர்.
படத்தொகுப்பாளர் :- ரவிக்குமார்.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான், சைமன் கே கிங்.
தயாரிப்பு நிறுவனம் :- ராடான் மீடியா பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- சரத்குமார், ராதிகா சரத்குமார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த தலைமை செயலகம் வலைத்தொடர் சுமார் 8 பகுதிகளாக கொண்டு வெளிவரவுள்ளது.
இம்மாதம் 2024 மே 17 ஆம் தேதி அன்று ZEE5 இணையத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடர் தமிழக அரசியல் களத்தின் நடந்த பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் வழக்கு மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது.
வட இந்தியாவில் மிகப்பெரிய ஒரு கொடூரமான கூட்டம், ஒன்று பெண்ணின் முகம் காட்டப்படாத அந்த பெண்ணை அடித்து ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு சித்திரவதை செய்யப்பட்டு கைகளை கட்டி தரதரவென்று இழுத்து வந்து ஊர் மத்தியில், இந்தப் பெண்ணை மிகவும் கொடூரமாக தாக்கி ஒரு குடிசையில் அடைகிறார்கள்.
ஒரு நிலையில் அந்தப் பெண் தன்னை தாக்கிய மொத்த கும்பலையும் வெட்டி வீழ்த்திவிட்டு தமிழகத்துக்கு தப்பி சென்று விடுகிறார்.
தமிழக முதல்வராக இருக்கும் கிஷோர் மீது ஒரு ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் சுப்பிரமணி சுவாமி போல் இருக்கும் ஒருவரால் ஆந்திரா மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் கிஷோர் இரண்டு மகள்கள் மூத்த மகள் ரம்யா நம்பீசன் தன் தந்தையை பின்பற்றி அரசியலில் பயணப்படுகிறார் .
இளைய மகளுக்கு திருமணம் ஆகி கணவன் பிக் பாஸ் நிரூப் நந்தகுமார் தனது மாமனார் முதல்வர் என்பதால் அரசியல் அதிகாரம், காண்ட்ராக்ட், என பல கோடிகளை சம்பாதித்து கொண்டு இருக்கிறான்.
தமிழக முதல்வரோடு ஒன்றாக கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து பழம் பெரும் மூத்த அரசியல்வாதியான சந்தான பாரதி கட்சியில் பொது செயலாளர் பதவியில் சுயநலம் இல்லாமல் கட்சிக்கு விசுவாசமாக இருந்து கொண்டிருக்கிறார்.
தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின் ஆலோசகரான ஸ்ரேயா ரெட்டி இருந்து வருகிறார்.
தமிழக முதல்வர் கிஷோருக்கு சாட்சிகள் அனைத்தும் எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்புள்ளதாக அனைவரும் அறிகின்றனர்.
தமிழக முதல்வர் கிஷோர் மீதான ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டு அவர் சிறைசாலைக்கு சென்று விட்டால், தமிழக முதலமைச்சர் நாற்காலியை பிடிப்பதற்காக சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன..
தமிழக முதல்வர் கிஷோரின் மூத்த மகள் அமைச்சருமான ரம்யா நம்பீசன், தமிழக முதல்வர் கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.
இந்த சூழலில், தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின் ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அந்த முதல்வர் நாற்காலிக்கு குறி வைக்கிறார்.
தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின் ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் மீது இருக்கும் நட்பாலும் நம்பிக்கையாலும் ஷ்ரேயா ரெட்டி சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் கிஷோர்.
அதேசமயம், தனது தந்தை தமிழக முதல்வர் கிஷோரை எப்படியாவது இந்த ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன்.
காவல்துறை அதிகாரியான பரத் தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார்.
அந்த கொலை வழக்கானது ஒரே நேர்கோட்டில் நூல் பிடித்தது போல் செல்ல இவை அனைத்தும் ஒரு புள்ளிகளிடம் வந்து சேர்கிறது.
அந்த பெரும்புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? தமிழக முதல்வர் கிஷோருக்கு ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டாரா? தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? என்பதுதான் இந்த தலைமை செயலகம் வலைத்தொடரின் நீதி கதை.
இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருக்கிறார்.
தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.
நடிகர் கிஷோர் தனக்குப் பிறகு கட்சியின் நிலைமை, தமிழக மக்களின் ஆட்சியின் நிலைமை என வருந்தி நிற்கும் தருணத்தில் நடிப்பின்ன் உச்சம் தொடுகிறார்.
இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.
இந்த வலைத்தொடரில் ஷ்ரேயா ரெட்டி முக்கிய தூணாக வந்து நிற்க இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை செய்வதற்கு தமிழ் திரைப்பட உலகில் இவரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு “கொற்றவை” கதாபாத்திரத்திற்கு ஆகப் பொருத்தமாகவும் கதாநாயகி ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பரத், இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் மிகப்பொருத்தமாக இருக்கிறார்.
சிபிஐ அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா மேனனின் விசாரணை செய்யும் தோரணையை நடிப்பின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.
ரம்யா நம்பீசன் அமைச்சராக கதாபாத்திரத்தில் மிகவும் இறுக்கமான முகத்தோடு அவருடைய நடிப்பின் மூலம் கைதட்டல் வாங்கி இருக்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து , கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் அளவோடு செய்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு வளைத்தொடருக்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.
இதுவரை நாம் பார்த்த இந்திய அரசியல், தமிழக அரசியல் இரண்டையும் கலந்து ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை மிகவும் நேர்த்தியான படைப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
மொத்தத்தில் – இந்த தலைமைச் செயலகம் நீட் & க்ளீன் பொலிட்டிக்கல் வளைத் தொடரை அனைவரும் நிச்சயம் கண்டிப்பாக பார்க்கலாம்.
ரேட்டிங் :- 4 / 5.











