பிரபல இயக்குநர் சூரிய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
பிரபல இயக்குநர் சூரிய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
சென்னை 27 மே 2024 சுப்ரீம் சார் சரத்குமார் நடிப்பில் வெற்றி பெற்ற ‘மாயி’ திரைப்படத்தின் இயக்குநர் சூரிய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குநராக கே.வி. பாண்டியன் என்ற பெயரில் அறிமுகமானவர்.
அதன் பிறகு தன்பெயரை சூரிய பிரகாஷ் என மாற்றிக்கொண்டு மாயி, திவான், அதிபர், வருசநாடு ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவருடைய குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/realsarathkumar/status/1794909335648408040?t=Vn5ZS8pvXnmh5xuZ25I9Fw&s=19