நாயாடி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.75/5.
நடிகர் & நடிகைகள் :- ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, காதம்பரி ஃபேபியன் ஆர், நிவாஸ் சரவணன், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன் கே, கீதா லட்சுமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆதர்ஷ் மதிகாந்தம்.
ஒளிப்பதிவு :- மோசஸ் டேனியல்.
படத்தொகுப்பு :- சி.எம். இளங்கோவன்.
இசை :- அருண்.
தயாரிப்பு நிறுவனம் :- ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ், மாயா கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- மோகன்தாஸ் புல்லாணிகட் , ஆதர்ஷ் மதிகாந்தம், மணி சுரேஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ்.
ரேட்டிங் :- 1.75./ 5.
கதாநாயகன் ஆதர்ஷ், கதாநாயகி காதம்பரி, மற்றும் நண்பர்கள் பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி ஆகிய ஐந்து பேரும் ரிசர்ச் செய்து யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த ஐந்து பேரிடம் ஒரு அடர்ந்த காட்டிற்கு பழைய பங்களா ஒன்று வாங்கியுள்ளதாகவும் அதில் பேய் இருப்பதாகவும் அதை வீடியோ எடுத்துத் தருமாறு ஐந்து பேரிடம் ஒருவர் அணுகுகிறார்.
காட்டுக்குள் இருக்கும் பங்களாவிற்கு ஐந்து பேரும் வீடியோ எடுப்பதற்கு அடர்ந்த காட்டுக்குள் கதாநாயகன் ஆதர்ஷ், கதாநாயகி காதம்பரி, மற்றும் நண்பர்கள் பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி
செல்கின்றனர்.
முழு நீள கருப்பு உடையில் ஒரு உருவம் அவர்களை பின் தொடர்வது போன்று அவர்களுக்கு தோன்றுகிறது.
தொடர்ந்து அந்த அமானுஷ்ய உருவம், ஒவ்வொருவரையும் கொலை செய்து கொண்டே இருக்கிறது.
அந்த அந்த அமானுஷ்ய உருவத்திலும் இருந்து யாரெல்லாம் தப்பித்தார்கள்.? இந்த காட்டிற்குள் யார் இவர்களை திட்டம்போட்டு இந்த காட்டிற்குள் அழைத்து வந்தது? அழைத்து வந்ததின் நோக்கம் என்ன.? என்பதுதான் இந்த நாயாடி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த நாயாடி திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதர்ஷ், நடித்திருக்கிறார்.
இந்த நாயாடி திரைப்படத்தில் கதாநாயகியாக காதம்பரி நடித்துள்ளார்.
நண்பர்களாக வரும் பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன் என திரைப்படத்தில் நடித்தவர்களில் அனைவரும் புதுமுகங்கள் என்பதால் திரைப்படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியலின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.
ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியலின் ஒளிப்பதிவில் காடுகள் மலை அருவிகள் அருமையாக காண்பித்திருக்கிறார்.
இந்த நாயாடி திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் இசையமைப்பாளர் அருண் இசை மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் அருண் பின்னணி இசை மிக்சிங் சரியாக செய்யாததால் பேசும் வசனங்கள் கூட கேட்க முடியாத அளவிற்கு காதுகள் கிழிய வைத்து விட்டார்.
முன்னொரு காலத்தில் வாழ்ந்த நாயாடி என்ற மலைவாழ் மக்களை பற்றிய கதையை திரைப்படமாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம்.
ஆனால் கதைக்கு தேவையான விஷயங்களை தாண்டி மற்ற விஷயங்களை காண்பித்து திரைப்படம் பார்த்து ரசிகர்களை போர் அடிக்க வைத்துவிட்டார் இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம்.
திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாததால் கவன சிதறல் ஏற்படுகிறது.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் நாயாடி திரைப்படம் மக்களை ருசிக்க வைக்குமா சந்தேகம் தான்.











