“ஆகக் கடவுன” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஆதிரன் சுரேஷ், வின்சென்ட் S, CR ராகுல், மைக்கேல் S, சதிஷ் ராமதாஸ், தஷ்ணா, ராஜசிவன், விஜய் ஸ்ரீநிவாஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தர்மா.
ஒளிப்பதிவாளர் :- லியோ V ராஜா.
படத்தொகுப்பாளர் :- சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ்.
இசையமைப்பாளர் :- சாந்தன் அன்பழகன்.
தயாரிப்பு நிறுவனம்:- சாரா கலைக்கூடம்.
தயாரிப்பாளர்கள் :- அனிதா லியோ – லியோ V ராஜா
ரேட்டிங் :- 3./5.
கதையின் நாயகர்கள் ஆதிரன் சுரேஷ், CR ராகுல் மற்றும் ராஜசிவன் இவர்கள் மூவரும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
இந்த கதையின் நாயகர்கள் ஆதிரன் சுரேஷ், CR ராகுல் மற்றும் ராஜசிவன் மூன்று நண்பர்களும் மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைத்து தங்களது வாழ்க்கையின் பாதையை ஆரம்பிக்க நினைக்கின்றனர்.
மற்றொரு பக்கம் S, சதிஷ் ராமதாஸ் மற்றும் மைக்கேல் S மூவரும் இளைஞர்களை கடத்தி அவர்களை வைத்து பணம் திருடுவது கொள்ளையடிப்பது ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
தாங்கள் வேலை பார்க்கும் மெடிக்கல் ஷாப்பை சொந்தமாக வாங்குவதற்காக ஆதிரன் சுரேஷ், CR ராகுல் மற்றும் ராஜசிவன் மூவரும் பல இடங்களில் ரூபாய் 6 லட்சத்தை கடனாக வாங்குகிறார்கள்.
இவர்கள் மூவரும் கடனாக பெற்ற ரூபாய் 6 லட்சத்தையும் ஒரு திருடன் திருடிச் சென்று விடுகிறான்.
பணத்தை பறிகொடுத்த ஆதிரன் சுரேஷ், CR ராகுல் மற்றும் ராஜசிவன் மூவரும் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கிறார்கள்.
இவர்கள் அறிவித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்தவிதமான விசாரணையும் முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இதனால் சொந்தமான விவசாய நிலத்தை விற்று பணத்தைத் தருவதாக ஆதிரன் சுரேஷ், தந்தை கூறுகிறார், அந்தப் பணத்தை வாங்குவதற்காக கிராமத்திற்கு ஆதிரன் சுரேஷ், CR ராகுல் இருவரும்
செல்கின்றனர்.
அவர்கள் கிராமத்துக்குச் செல்லும் வழியில் அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் பஞ்சராகி விட, இருவரும் காட்டுப்பகுதிக்குள் உள்ள பஞ்சர் கடைக்குச் சென்று பஞ்சர் பார்க்கச் செல்கின்றார்கள்
பஞ்சர் ஒட்ட சென்ற பஞ்சர் கடையில், வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் மற்றும் மைக்கேல் S மூவரும் ஆதிரன் சுரேஷ், CR ராகுல் இவர்கள் இருவரையும் வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் ஆதிரனையும் ராகுலையும் தொடர்ந்து முறைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஏன் இவர்கள் ஆதிரன் சுரேஷ், CR ராகுல் இவர்களை வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் ஆதிரனையும் ராகுலையும் தொடர்ந்து முறைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.,? இவர்கள் இரண்டு குரூப்புக்கும் என்ன பிரச்சினை இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.? என்பதுதான் இந்த ஆகக் கடவன திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த ஆகக்கடவன திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதிரன் சுரேஷ், நடித்திருக்கிறார்.
தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச்சிறப்பாக
நடித்திருக்கிறார்.
எந்த இடத்திலும் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அருமையான நடிப்பைக் கொடுத்து மிக அழகாகவே பொருந்தி இருக்கிறார்.
CR ராகுல் கதையின் திருப்புமுனைக்கு இவரது கதாபாத்திரத்திரமே முக்கிய பங்காக இருக்கிறது.
பட்டாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ் ராமதாஸ் தனது கதாபாத்திரத்தை மிகவும் வித்தியாசமாக நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அதிலும் CR ராகுல் சொல்லும், கோழி கதை, நாய் கதை திரையரங்குகளில் நிச்சயம் சிரிப்பலைகளை எட்டிப் பார்க்க வைக்கும் என்பது உறுதி.
வின்சென்ட் S ம்ற்றும் மைக்கேல் S இருவருடைய கதாபாத்திரமும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
புகழ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜசிவன் மற்றும் பஞ்சர் கடையில் வேலை பார்த்த சிறுவன் கதாபாத்திரம், ஆதிரன் சுரேஷ்யின், தந்தை கதாபாத்திரமும் அனைவருடைய நடிப்பும் திரைப்படத்திற்கு பெரும் துணையாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் லியோ வி ராஜின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறது.
இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மட்டுமே நம்மை கதைக்குள் கொண்டு சொல்கிறது.
நாம் எங்கோ யாருக்கோ எப்போதே செய்த செயல் ஒன்றின் பலன் நமக்கு கிடைக்காமல் போகாது என்ற கதையை எடுத்து கொண்டு மிகவும் அழகாகவும், திரைக்கதையை மிகவும் தெளிவாகவும, மிகஅருமையான வசனங்களை மிக அற்புதமான படைப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் தர்மா.
மொத்தத்தில் – ஆகக் கடவுன திரைப்படம் தமிழ் திரைப்பட உலகிற்கு அரிதான ஒரு படைப்பாக அமைந்துள்ளது.











