அவள் அப்படித்தான் 2 திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.25/5.

நடிகர் & நடிகைகள் :- அபுதாஹிர், சினேகா பார்த்திபராஜா, ராஜேஸ்வரி, அனிதா ஸ்ரீ, சுமித்ரா, சுதாகர், வெங்கட்ரமணன், கார்த்திகா, தொல்காப்பியன் தனபால், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரா.மு. சிதம்பரம்.

ஒளிப்பதிவு :- வேதா செல்வம்.

படத்தொகுப்பு :- அகமது.

இசை :- அரவிந்த் சித்தார்த்.

தயாரிப்பு நிறுவனம் :-  யுன் ப்ளிக்ஸ்.

தயாரிப்பாளர் :- செய்யது அபுதாஹிர்.

ரேட்டிங் :- 2.25/5.

கதையின் நாயகி சினேகா பார்த்திபராஜா, ஒரு தனியார் பள்ளி ஆசிரியை.அறிவும் துணிவும் மனிதனுக்கு அழகு என்று வளர்க்கப்பட்டவள்.

பிறருக்கு உதவுவது, தவறுகளைத் தட்டிக் கேட்பது, சுதந்திரமான சிந்தனையோடு இயங்குவது என்று இருப்பவள்.

கதையின் நாயகன் அபுதாஹிர் சொந்தமாக தொழில் நடத்தி வரு ம் இவரிடம் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களுக்கு பள்ளி செல்லும் ஒரு செல்லமகளும் இருக்கிறார்.

கணவன் – மனைவி இருவரும் ஆளுக்கு ஒரு சிந்தனை உடையவர்களாக இருப்பது போல், பல விஷயங்களில் முரண்பாடான கருத்துடையவர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கதையின் நாயகன் அபுதாஹிர் பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

கதையின் நாயகி சினேகா பார்த்திபராஜா, ஆண்களுக்கு பெண்கள் எப்போதுமே சமமாக இருக்க வேண்டும் என பெண்கள் அனைவரும் சுதந்திரமாகவும், தைரியமாகவும் வாழ வேண்டும் என்ற சிந்தனையோடு மட்டும் வாழ்ந்தும் வருகிறார்.

ஒரு நாள் சனிக்கிழமை காலை ஆசிரியராக பணிபுரியும் பள்ளிக்கு செல்கிறார் கதையின் நாயகி சினேகா பார்த்திபராஜா இரவு 10 மணி ஆகியும் இன்னும் வீடு விரும்பவில்லை.

கதையின் நாயகன் அபுதாஹிர்  அவருடைய தாய், மற்றும் மாமியார், குழந்தை என அனைவரும் காணவில்லையே என பதற்றம் அடைகிறார்கள்.

தன் நண்பனுடன் இணைந்து கொண்டு வெளியே தேடுகிறான் கதையின் நாயகன் அபுதாஹிர் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால், கதையின் நாயகன் அபுதாஹிர் குடும்பத்தினர் இன்னும் வீடு திரும்பவில்லையே என பயந்து அவரைஇரவு முழுவதும் தேடி தேடி அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொழுது விடிந்ததும் கதையின் நாயகி சினேகா பார்த்திபராஜா வீடு திரும்புகிறார்.

அவரை கண்டவுடன், இரவு ஏன் வரவில்லை உனக்கு என்ன நடந்தது என்று கேட்காமல் இரவு எங்கே போயிருந்தாள்? என்பதுதான் குடும்பத்தினர் அனைவருக்கும் முன்னே நிற்கும் கேள்வி.

ஆனால் கேள்வியை “ராத்திரி எங்கே போயிருந்தாய்?” என்று அவள் கணவன் கோபமாகக் கேட்க, அவளோ “ராத்திரி நான் எங்கே போயிருந்தேன்னு தெரியணுமா? இல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியணுமா?” என்கிறாள்.

இப்படி நேரடியான பதிலை மட்டும் சொல்லாமல் ஏதேதோ பேசுகிறாள், தன் மனம் நினைத்தபடி ஏதேதோ செய்கிறாள்.

என்ன நெஞ்சழுத்தமென்று அவனது ஈகோ தலைதூக்கி நிமிர, எதற்குச் சொல்ல வேண்டும் என்று அவளது மனம் திமிறிக் கேள்வி கேட்க, வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக வெடிக்க
அதன்பின் முடிவு என்ன என்பதுதான் ‘அவள் அப்படித்தான் 2 ‘ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன்னாக வரும் அபுதாஹிர் இறுக்கமாக, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அந்த நடுத்தர வயது கணவருக்குரிய உணர்வுகளை இயல்பாகவே வெளிப் படுத்தியுள்ளார்.

கதையின் நாயகியாக மஞ்சு கதாபாத்திரம் ஏற்றுள்ள சினேகா பார்த்திபராஜாவின் தோற்றமும், உடல் மொழியும், முக பாவங்களும் மஞ்சு என்பவள் இப்படித்தான் என்ற கருத்தை சொல்லாமல் சொல்லிவிடுகின்றன.

கதையின் நாயகன் அபுதாஹிர் தாயாக வரும் ராஜேஸ்வரி, கதையின் நாயகி சினேகா பார்த்திபராஜா தாயாக வரும் அனிதா ஸ்ரீ, ஆச்சியாக வரும் சுமித்ரா,மகள் சிறுமி கார்த்திகா,கதையின் நாயகி சினேகா பார்த்திபராஜா தந்தையாக இயக்குநர் வெங்கட்ரமணன் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் மிகவும் அருமையாக செய்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் வேதா செல்வம் ஒழிப்பது கடைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த் இசை மற்றும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதால் சலிப்பூட்டுகிறது.

இது தொலைக்காட்சித் தொடரா இன்று என்ன வைக்கிறது.

அதைத் தெரியாத வகையில் இன்னும் காட்சிகளைச் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.

வசனங்களுக்கு மெனக்கெட்டு இருப்பது போல் காட்சிகளை சுவாரஸ்யப் படுத்த முயன்றிருந்தால் இந்த அவள் அப்படித்தான் 2′ திரைப்படம் பெண்ணியம் சார்ந்து இயல்பான கதை சொன்ன முக்கியமான திரைப்படமாக, பெண்ணின் உரிமைகளை இயல்புகளைப் பேசும் குறிப்பிடத்தக்க திரைப்படமாக மாறியிருக்கும்.

அதே நேரம் திரும்பத் திரும்ப வரும் சில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் அவள் அப்படித்தான் 2 திரைப்படம் பேசிக் கொண்டே இருப்பதால் சின்னத்திரை சீரியல் பார்ப்பது போல் உள்ளது.

error: Content is protected !!