என்ஜாய் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./5.

நடிகர் நடிகைகள் :- மதன்குமார்,
டான்சர் விக்னேஷ், ஹரீஸ் குமார், நிரஞ்சனா, ஜீ,வி அபர்ணா, சாய் தன்யா, பில்லி முரளி, ஹாசின், சாருமிசா, காலாட்படை” ஜெய், யோகிராம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பெருமாள் காசி.

ஒளிப்பதிவு :- KN அக்பர்.

படத்தொகுப்பு :-  மணி குமரன்.

இசை :- KN ரயான் – சபேஷ்- முரளி.

தயாரிப்பு :-  எல் ,என், எச் , கிரியேசன்.

தயாரிப்பாளர் :- கே.லட்சுமி நாராயணன்.

ரேட்டிங் :- 3. / 5

தமிழ் திரைப்பட உலகில் பல வருடங்களாக பல திரைப் படங்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த பெருமாள் காசி இந்த என்ஜாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த என்ஜாய் திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் டீன் ஏஜ் ஆண்கள் பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் இந்த ‘என்ஜாய்’.

இந்த என்ஜாய் திரைப்படம் டைட்டிலுக்கு ஏற்றவாறு இரண்டு மணி நேரம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றாமல் என்ஜாய் பண்ண வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பெருமாள் காசி.

இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக மூவர் இருக்கின்றனர்

அதில் ஒருவர் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார் இன்னொருவர் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ் மற்றொருவர்
பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் நண்பர்களாக இருக்கும் இவர்கள் ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் தோழிகளாக இணைகிறார்கள்.

ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின்.

மதன் குமாருக்கு காதலி இருந்தாலும், இவர்களுக்குள் சின்னச்சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி அடைகிறார் மதன் குமார்.

விரகதி அடைந்த மதன்குமார் தன் காதலியை விட்டு பிரிகிறார்

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷ் சரியான செக்ஸ் பைத்தியம்.

திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு.

இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு மூவரும் கிளம்பி செல்கிறார்கள்.

அதேபோல சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்துகொண்டு வசதியான ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்து பணம் சம்பாதித்து வருகிறார்.

இதனை பார்க்கும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ தயாராகின்றனர் அப்படி அவர்களுக்கான முதல் வீக்-எண்ட் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.

மூன்று கதாநாயகரகள் எதிர்பார்த்தும் வந்தது நடக்காமல் போகிறது.

மூன்று கதாநாயகிகளும் எதிர்பார்த்ததும் வந்ததும் அங்கு அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது.

இதனால் ஏமாற்றம் அடையும் இவர்கள் அனைவருக்கும் ஒரு இடத்தில் நட்பு கிடைக்கிறது.

எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும், பார்ட்டியில் முதன்முறையாக என்ஜாய் பண்ண வந்த மூன்று தோழிகளும் ஒரு இக்கட்டான சூழலில் ஒன்றாக சந்தித்து ஒரே அறையில் தங்கும் சூழலும் உருவாகிறது.

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்ட தோழிகளுக்கு பார்ட்டியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது.

அவர்களுக்கு உதவப்போய் இந்த மூன்று கதாநாயகர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்களா ? மீளவில்லையா? என்பதுதான் இந்த என்ஜாய் திரைப்படத்தில் என்பதுதான் இந்த என்ஜாய் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த என்ஜாய் திரைப்படத்தில் மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஸ் குமார், மூவரும் கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.

காதலியிடம் இருந்து ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்காதா என சதா ஏங்கியபடியே தனது ஐஏஎஸ் படிப்பில் தடுமாறும் மதன்குமார்.

பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் டேட்டிங் வர மாட்டாளா என நினைக்கும் டான்சர் விக்னேஷ்,

திருமணத்திற்கு முன்பே அந்தரங்க பிரச்சனையில் சிக்கும் ஹரிஷ்குமார் என மூன்று கதாநாயகர்களுக்குமே திரைப்படத்தில் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் டான்ஸர் விக்னேஷ் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளார்.

அவருக்கு அது ஒர்க் அவுட்டும் ஆகியுள்ளது.

மதன்குமார் சற்று சீரியஸ் முகம் காட்டினாலும் காதலில் விழும் இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல இருந்தாலும் இந்த மூவரும் ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியுள்ளனர்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வந்து, அந்த கலாச்சாரத்தை பதட்டத்துடன் எதிர்கொண்டு, அதை எப்படி அணுகுவது என ஒரு தெளிவில்லாமல் குழம்பும் இளம்பெண்களின் பிரதிபலிப்பாகவே ஜீவி அபர்ணா மற்றும் சாருமிசாவின் கதாபாத்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவர்களும் சோடை போகாத நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை தாங்கிப் பிடித்துள்ளனர்.

இவர்களின் தோழியாக வரும் நிரஞ்சனாவின் பக்குவமான பேச்சும் அணுகுமுறையும், இடைவேளைக்கு பின்னான ரொமான்ஸும் இந்த மூவரில் இவருக்கு கொஞ்சம் கூடுதல் மார்க் பெற்று தருகிறது.

கல்லூரியில் சீனியர்கள் எல்லாம் இப்படி நல்ல தோழிகளாக இருந்துவிட மாட்டார்களா என ஏங்க வைக்கும் விதமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஹாசின்.

சூழ்நிலை காரணமாக அவர் தனது லைப்ஸ்டைலை மாற்றிக்கொண்டாலும் தன்னைப்போலவே மாற முயற்சிக்கும் தனது தோழிகளை அவர் ஆரம்பத்தில் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்த முயற்சிப்பது அவர் மீதான மரியாதையை கூட்டுகிறது..

மதன்குமாரின் சீரியஸ் காதலியாக வரும் சாய் தன்யா கதாபாத்திரம் இன்றைய இளம் பெண்கள் காதலை எப்படி பாதுகாப்பாக அணுக வேண்டும் என்பதற்கு ஒரு சரியான உதாரணமாக நடித்திருக்கிறார்.

இவர்கள் தவிர டெரர் காவல்துறை அதிகாரியாக வலம் வந்து கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுக்கும் காவல்துறை ஆய்வாளர் பில்லி முரளி, வீக்-என்ட் பார்ட்டி நடத்துகிறேன் என டீசன்டான வில்லத்தனம் காட்டியிருக்கும் ரிசார்ட் ஓனர் “காலாட்படை” ஜெய், பெண்களை அரக்கத்தனமாக அணுகும் சைக்கோ வில்லன் யோகிராம் என இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களும் கவனம் பெறுகின்றன.

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவில் சென்னையை விட கொடைக்கானல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதோ நாமே சுற்றுலா போய்வந்த உணர்வை தருகின்றது.

இசையமைப்பாளர் கேஎம்.ரயானின் இசை இந்த லிரைப்படத்திற்கான பொருத்தமான பாடல்களை கொடுத்திருக்கிறார்.

இடைவேளைக்குப்பின் வரும் இரண்டு பாடல்கள் அருமை.

இசையமைப்பாளர் சபேஷ்-முரளியின் பின்னணி இசை திரைப்படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

மணி குமரனின் படத்தொகுப்பும் அந்த விறுவிறுப்புக்கு பக்கபலமாக கை கொடுத்துள்ளது.

இளைஞர்களை மையப்படுத்தி, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாக இந்த கதையை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பெருமாள் காசி
முதலில் பாராட்டி விடலாம்.

குறிப்பாக இன்றைய பல இளைஞர்களின் மனப்போக்கை ஒவ்வொரு கதாப்பாத்திரம் வாயிலாக நன்றாக வெளிப்படுத்தவும் செய்துள்ளார் இயக்குனர் பெருமாள் காசி.

இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசும் மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும்.

சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும்.

மொத்தத்தில் என்ஜாய் திரைப்படம் இளசுகளை குறி வைக்கும் என்ஜாய்.