கண்ணை நமபாதே திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5 / 5.
நடிகர் நடிகைகள் :- உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ.கருப்பையா, சென்ட்ராயன், கு. ஞானசம்பந்தம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மு. மாறன்.
ஒளிப்பதிவு :- ஜலந்தர் வாசன்.
படத்தொகுப்பு :- ஷான் லோகேஷ்.
இசை :- சித்து குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- : LIPI சினி கிராஃப்ட்ஸ்.
தயாரிப்பாளர்:- வி.என்.ரஞ்சித்குமார்.
ரேட்டிங் :- 2.5 / 5.
இயக்குனர் மு.மாறன் இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனர் மு. மாறன் இந்த கண்ணை நம்பாதே திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் பேச்சுலர்
கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது நண்பருடன் வீடு தேடி வருகிறார்,
இந்த சமயத்தில் வாடகைக்கு வீடு கிடைத்து விடுகிறது.
ஆனால் இந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா தங்கியிருக்கிறார்.
அவருடன் சேர்ந்து அதே வீட்டில் தங்க முடிவெடுத்து குடியேறுகிறார் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்.
அந்த விட்டில் குடியேறிய அதே நாள் இரவில் பிரசன்னா, கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்யை சரக்கு அடிக்கலாம் என அழைக்கிறார்.
தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் நண்பர் சதீஸ் இவர்களுடன் இணைகிறார்.
அன்று இரவே ஒரு விபத்தில் சிக்கும் பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார்.
போதையில் இருக்கும் பிரசன்னா, கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு பூமிகா வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு பூமிகாவிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக பூமிகாவை கொலையும் செய்து விடுகிறார்.
காலையில் காரில் பூமிகாவின் சடலத்தை பார்க்கும் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைகிறார்.
இந்த கொலை பழியை கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் மீது பழி போடுகிறார் பிரசன்னா சடலத்தை மறைக்க கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கு உதவி செய்கிறார்.
அப்போது மேலும் ஒரு விபத்தில் ஒருவர் இறக்க, இரண்டு சடலத்தை வைத்து எப்படி தப்பிக்க என்று பிரசன்னாவும், உதயநிதி ஸ்டாலினும் திட்டம் போடுகிறார்கள்.
மறுபக்கம் இவர்களின் திட்டத்தை தெரிந்துக் கொண்டு மர்ம நபர் இவர்களை மிரட்டுகிறார்.
இறுதியில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா இருவரும் கொலை செய்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? இவர்களை மிரட்டும் மர்ம நபர் யார்? மிரட்ட காரணம் என்ன? என்பதுதான் இந்த கண்ணை நமபாதே திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கண்ணை நமபாதே திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர் செய்யாத ஒரு குற்றத்திற்கு போராடும் இளைஞனாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.
காதல், பரிதவிப்பு அப்பாவி தனம் என கிடைக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
இந்த கண்ணை நமபாதே திரைப்படத்தில் கதாநாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
ஆத்மிகா, அழகாக வந்து அளவான அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரசன்னா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார் .
ஶ்ரீகாந்த் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.
பூமிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார் .
வசுந்தராவின் மிரட்டலான நடிப்பை கொடுத்து பாராட்டு பெறுகிறார்.
சுபிக்ஷா சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, கிருஷ்ணன்,பழ.கருப்பையா,
சென்ட்ராயன், கு. ஞானசம்பந்தம் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு திரைக்கதையின் ஓட்டத்திற்கு மிகவும் உதவி இருக்கிறது.
இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது.
இவரது பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்து உள்ளது.
ஒரு கொலை, அதை மறைக்க போராடும் இரண்டு நண்பர்கள், பிளாக்மெயில், மெடிக்கல் கிரைம் என திரில்லர் பாணியில் இந்த கண்ணை நம்பாதே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.
அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.
மொத்தத்தில் கண்ணை நம்பாதே திரைப்படத்தை கண்டிப்பாக நம்பலாம்.