‘பராரி திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ் பிரேம் நாத்,புகழ் மகேந்திரன், சுகுமார் சண்முகம்,மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- எழில் பெரியவேதி.

ஒளிப்பதிவாளர் :- ஸ்ரீதர்.

படத்தொகுப்பாளர் :- ஷாம் RDX.

இசையமைப்பாளர் :- சீன் ரோல்டன்

தயாரிப்பு நிறுவனம் :-  காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- ஹரிசங்கர்.

ரேட்டிங்:- 3./5.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  ராஜபாளையம் எனற வலது புறமும் இடது புறமும் மேல் மட்ட சாதியினர் ஒரு புறமும் ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒருபுறமும் இருக்கும்  கிராமத்தில் ஒரு நாள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  கதாநாயகன் ஹரிசங்கர் அவரது நண்பர்களும்; கிராமத்தின் தெருக்களில் வழிதவறி ஓடும் தங்களது கோவிலுக்கு நேர்ந்து விட்ட  பன்றியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள்.

இது சாதி அடிப்படையிலான சமூகத்தில் மேல் மட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி கோபத்தை வரவழைக்கிறது.

கதாநாயகன் ஹரிசங்கர் அவருடைய நண்பர்களுக்கும் தொடர்ந்து மேல் சாதியை சேர்ந்தவர்கள் அடிக்கடி தொல்லைகளை கொடுத்து அரசியல் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடிக்க தண்ணீர் வசதியை நிறுத்தும் அளவிற்கு செல்கிறது.

அதே நேரத்தில், சிறு வயதிலிருந்தே மேல் சாதியைச் சேர்ந்த கதாநாயகி சங்கீதா கல்யாண் கதாநாயகன் ஹரிசங்கர் மீது சிறு வயது முதல் காதலித்து வருகிறார்.

அவரையே திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார்.

மேல் சாதி கீழ்சாதி என பாகுபாடு காரணமாக கதாநாயகி சங்கீதா கல்யாண் கதாநாயகன் ஹரிசங்கர் ஒதுக்குகிறார்.

இந்த காதலை அறியும் மேல் சாதியினர் கதாநாயகன் ஹரிசங்கரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.

மேலும், மலை உச்சியில் கொட்டாங்கல் பாறை உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்ய வந்த கதாநாயகன் ஹரிசங்கர் மற்றும் அவரது கீழ் சாதியினர் மீது மேல் சாதியினர் தங்கள் கோபத்தை கட்டவிழ்த்துவிட இரண்டு கிராமங்களும் மோதல் தீவிரமடைகிறது.

வேறு வழியின்றி கதாநாயகன் ஹரிசங்கர் கர்நாடகாவில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைக்கு பணிக்கு செல்கிறார்.

கதாநாயகன் ஹரிசங்கருடன் சேர்ந்து கதாநாயகி சங்கீதா கல்யாண் மற்றும் ராஜபாளையத்தில் உள்ள இரண்டு சாதியை சேர்ந்த  மக்களும் கர்நாடகா தொழிற்சாலைக்கு முன்று மாத காலம் பணிக்கு செல்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட வெறியர்கள் மொழி ரீதியான பாகுபாடுகளுடன் இவர்களை கீழ்தரமாக நடத்துகின்றனர்.

அந்த பழச்சாறு தொழிற்சாலைக்கு பணிபுரியும் ஒரு சில கன்னட வெறியர்களால் ராஜபாளைய மக்கள் சூறையாடப்படுகின்றனர்.

அதன் பிறகு கதாநாயகன் ஹரி சங்கரும் என்ன செய்தனர்? இந்தக் கன்னட வெறியர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்களா,? காப்பாற்றிக் கொள்ளவில்லையா?, என்பதுதான் இந்த பராரி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பராரி திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரி சங்கர் நடித்திருக்கிறார்.

மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் ஹரிசங்கர் தனது சமூகத்தின் அவல நிலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆக்ரோஷ இளைஞராக, அநியாயத்தை தட்டி கேட்கும் மனோபாவத்துடன், இறுதிக் காட்சியில் உணர்ச்சிகளின் பிம்பமாக கடுமையான உழைப்பு கொடுத்து வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு நடிப்பின் மூலம் கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார்.

இந்த பராரி திரைப்படத்தில் கதாநாயகியாக சங்கீதா கல்யாண் நடித்திருக்கிறார்.

தேவகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சங்கீதா கல்யாண் காதலன் கதாநாயகன் ஹரிசங்கரை நினைத்து ஏங்கும் காட்சிகளிலும், தன்னை அவமானப்படுத்தும் வில்லனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நேரத்திலும், இறுதியில் இருவருக்கும் நேரும் அவமானம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்து விடுகிறது.

குரு ராஜேந்திரன, சாம்ராட் சுரேஷ் புகழ் மகேந்திரன், பிரேம் நாத் ஜெய குமார் மற்றும் பலர் கிராமத்துவாசிகளாகவே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் வெள்ளிப் பதிவு மிக அருமையாக உள்ளது.

மிக மிக அருமையான  கிராமத்து காட்சிகளுக்கும், சாதி சண்டை, கர்நாடகாவில் தொழிற்சாலையில் நடக்கும் அத்துமீறல்களும், மொழி அரசியல் செய்யும் காட்சிகளில் அட்டகாசமான ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை மிகவும் அருமையாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள கிராமத்தில் நடக்கும் இரு சமூகத்தின் சாதி பாகுபாடும், காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்படும் மொழிவெறி தாக்குதலையும் ஒன்றிணைத்து காதல், மோதல், என மையப்படுத்தி அரசியல் அதிகார சூழ்ச்சியை விவரித்து பல சமூக பிரச்சனைகளையும் வன்முறை காட்சிகளையும் ஒரே நேரத்தில் திணித்தது போன்று இருக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் எழில் பெரியவேதி அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்

மொத்தத்தில் இந்த பராரி திரைப்படம் இரு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனையை மிக அழகான காதல் பதிவு செய்திருக்கிறார்.