வெப்பம் குளிர் மழை திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாஸ்கல் வேதமுத்து.
ஒளிப்பதிவாளர் :- பிருத்வி ராஜேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- திரவ்.
இசையமைப்பாளர் :- ஷங்கர்
ரங்கராஜன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்:- திரவ்.
கிராமத்தில் கதநாயகன் திரவ் பசு மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்த்து வருகிறார்.
கதாநாயகன் திரவுக்கும் கதாநாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் நடந்து 5 வருடங்கள் ஆகியும் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இதனால், அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக கதாநாயகன் திரவ் கதாநாயகி இஸ்மத் பானு தம்பதியர் இருவருக்கும் குழந்தை இல்லாததை பற்றி சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி கிராமத்தில் உள்ள ஒரு அனைவரும் பேசுகிறார்கள்.
இதனால் தம்பதியர் இருவரும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
கிராமத்தில் உள்ள உறவினர்கள், மற்றும் சுற்றியிருப்பவர்களின் இத்தகைய பேச்சுக்களால் வருத்தப்படும் தம்பதி இருவரும் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
அதன்படி இருவரையும் பரிசோதித்ததில் கதாநாயகன் திரவுக்கு பிரச்சனை இருப்பது கதாநாயகி இஸ்மத் பானுவிற்க்கும் தெரிய வருகிறது.
ஆனால், தங்களுக்கு குழந்தை பிறப்பதில் தனது கணவருக்கு பிரச்சனை இருப்பது தன் கணவர் கதாநாயகன் திரவிடம் விஷயத்தை கூறாமல் மறைக்கும் கதாநாயகி இஸ்மத் பானு, அதே நேரத்தில் குழந்தையின்மை பிரச்சனையை கூறினால் தனது கணவர் கதாநாயகன் திரவ்
மனதளவில் பாதிக்கப்படுவார் என உணர்ந்து ஒரு அதிரடியாக முடிவு எடுக்கிறார்.
கதாநாயகி இஸ்மத் பானு எடுத்த அதிரடி முடிவால் அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் கொண்டாட ஒரு சில வருடங்களில் அந்த குழந்தையாலேயே கதாநாயகன் திரவுக்கும்கதாநாயகி இஸ்மத் பானுவுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் பூகம்பம் ஒன்று வெடிக்கிறது.
அந்த பூகம்பம் வெடித்ததற்கான காரணம் என்ன? என்பதுதான் இந்த வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வெப்பம் குளிர் மழை திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக திரவ் நடித்திருக்கிறார்.
அறிமுகமாக முதல் திரைப்படத்திலேயே மிக அழுத்தமான கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரவ், அவருடைய நடிப்பின் மூலம் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.
தன் மனைவி மீது உடனான காதல், ஊர் மக்களின் கேலிப் பேச்சால் கலங்குவது, தனது தவறை நினைத்து கதறி அழுவது, மனைவி தனக்கு தெரியாமல் செய்த காரியத்தால் தன் மனைவியை தவிப்பது, என்று அனைத்து உணர்வுகளையும் தனது ஆழமான நடிப்பு மூலம் மிக நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் திரவுக்கு இது தான் முதல் படம் என்றால் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.
அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக நடித்து பெத்தபெருமாள் என்ற கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.
இந்த வெப்பம் குளிர் மழை திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக இஸ்மத் பானு, நடித்திருக்கிறார்.
பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு தனது இயல்பான நடிப்பு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார்.
அவருடைய நடிப்பு மட்டும் இன்றி, வசன உச்சரிப்பு, உடல் மொழி என தனது ஒவ்வொரு அசைவுகளின் மூலம் கதை நடக்கும் கிராமத்து பெண்ணாகவே தம்மை உருமாற்றிக் கொண்டிருக்கிறார்.
பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இஸ்மத் பானு, இந்த திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கிராமங்களில் உள்ள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து நையாண்டி பேசும் கிராமத்து உள்ள தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், முன்னால் உள்ள தலைமுறையின் ஆரோக்கியம் மற்றும் கவலை இல்லாத வாழ்க்கையை பிரதிபலிக்கிறார்.
கதாநாயகனின் தாயாக நடித்திருக்கும் ரமா, கதாநாயகன், கதாநாயகிக்கு இணையாக நடிப்பில் நடிப்பின் மூலம் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி, கருப்பு என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.
மற்ற கதாபாத்திரங்களை, ஊர் மக்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும், அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும், எந்தவித பதற்றமும் இன்றி கேமரா முன்பு நடித்திருப்பது மிகப்பெரிய அளவில் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் எளிமையான ஒளிப்பதிவு, எளிமையான கிராமத்தை ரசிக்கும்படியாக காட்சி அமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கதை பயணிக்கும் கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன் இசையில், திரவின் வரிகளில் பாடல்கள் அனைத்திலும் கிராமத்து வாசம் வீசுவதோடு, புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜனின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு உயிரோட்டமாக கொடுத்திருக்கிறது.
கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல், திரைப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கும் திரவுதான் படத்தொகுப்பும் மற்றும் பாடல்களும் எழுதி இருக்கிறார்.
புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தையின்மை என்பது தம்பதி அல்லது தனிமனித பிரச்சனை இல்லை, அது ஒரு விளைவு, அது நடக்கும் போது நடக்கும் எனக் கூறி விடுவார்கள்.
ஆனால், அதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றுவது ஊர் மக்கள் மற்றும் சொந்த பந்தங்கள் தான்.
குழந்தையின்மை கருத்தை கொண்டு மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து, அதற்கான அறிவியல் தீர்வு இருந்தாலும், அதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்ளாமல் தான் இருக்கிறார்கள்.
குறிப்பாக வேண்டுமென்றால் கிராம மக்கள் இது தொடர்பான விஞ்ஞானத்தைப் பற்றி புரிதல் இல்லாமல் இருப்பதையும், அவர்களுக்கு இதை புரிய வைக்கவும் முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.
மொத்தத்தில், இந்த ‘வெப்பம் குளிர் மழை’ உயிர் குழந்தையின்மை கருத்து பற்றிய உன்னதமான படைப்பு.