‘தீபாவளி போனஸ்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விக்ராந்த், ரித்விகா, ஹரிஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜெயபால். ஜெ.
ஒளிப்பதிவாளர் :- கவுதம் சேதுராம்.
படத்தொகுப்பாளர் :- பார்த்தீவ் முருகன்.
இசையமைப்பாளர் :- மரியா ஜெரால்ட்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி.
தயாரிப்பாளர் :- தீபக் குமார் டாலா.
ரேட்டிங்:- 2.5./5.
மதுரை மாவட்டம் அருகில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் தன் மனைவி ரித்விகா மற்றும் ஒரு மகனுடன் கதாநாயகன் விக்ராந்த், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாரகிக் கொண்டிருக்கும் நிலையில், கதாநாயகன் விக்ராந்த் தன் மகனின் நீண்ட நாள் கனவான காவல்துறையினர் உடுத்தும் உடை, தன் மனைவி விரும்பிய புடவை, தனது மகனுக்கு பட்டாசு, பலகாரத்திற்கான செலவுகள் என்று இந்த வருட தீபாவளிக்கு ஆவது தனது குடும்பத்தினர் விரும்புவதை நிறைவேற்றி விட வேண்டும் என கதாநாயகன் விக்ராந்த் நினைக்கிறார்.
தன் வேலை பார்க்கும் கொரியர் நிறுவனத்தின் தீபாவளி போனஸுக்காக அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன் விக்ராந்த் மற்றும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கதாநாயகன் விக்ராந்த் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எதிர்பார்த்த போனஸ் கிடைக்காமல் போக, தனது குடும்பத்தின் இந்த தீபாவளிக்கு தேவையான தன் மகனுக்கு உடை மனைவிக்கு புடவை எப்படியாவது வாங்கி கொடுத்து விட வேண்டும் என வேறு சில முயற்சிகளில் மேற்கொள்கிறார்.
கதாநாயகன் விக்ராந்த் மேற்கொண்ட முயற்சி எதிர்பாராத விதமாக சிக்கலில் சிக்க வைத்துவிடுகிறது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிக்கல் இருந்து கதாநாயகன் விக்ராந்த் மீண்டாரா,? சிக்கலில் இருந்து மீளவில்லையா,?
தன் மனைவி மகனுடன் இந்த தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடினரா? கொண்டாடவில்லையா? என்பதுதான் இந்த ‘தீபாவளி போனஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘தீபாவளி போனஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், எந்த விஷயத்திலும் கோபம் கொள்ளாத தன்னுடைய உரிமையை கூட சத்தமாக கேட்காத யாராவது அடித்தாள் அடி வாங்கிக் கொண்டு சாதுவான இருக்கும் மிகவும் நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தன் செல்ல மகன் ஆசைப்பட்ட உடையை வாங்கிக் கொடுக்க முடியாத தனது இயலாமையை நினைத்து அவர் கலங்கும் காட்சிகளிலும், தன் மகனுக்காக காலணி வியாபாரியிடம் கெஞ்சும் காட்சிகளிலும், திரைப்படம் பார்க்கும் அனைத்து தந்தைகளையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
இந்த ‘தீபாவளி போனஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விக்ராந்த் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்விகா, வழக்கமான தோற்றத்திலும் நடிப்பிலும் எளிய மக்களின் வாழ்க்கையை மிக அழகாக நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.
கதாநாயகன் விக்ராந்த் – கதாநாயகி ரித்விகா தம்பதியின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ், இந்த திபாவளிக்கு நமக்கு புத்தாடை கிடைக்குமா? என்ற தனது ஏக்கத்தை தன் சோர்வடைந்த முகத்தின் மூலம் நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன், ஒளிப்பதிவு மூலம் இதுவரை நாம் பார்க்காத மதுரைப் பகுதிகளில் காட்சிகளை மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையில் பாடல்கள், பின்னணி இசையும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
இயக்குனர் ஜெயபால்.ஜெ, சாதாரண மக்களின் வாழ்வியலை பற்றிய சாதாரண ஒரு கதை களத்தை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதை மூலம் மிகவும் அழுத்தமாக கூறியிருந்தாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையிலும் வசனங்களிலும் காட்சிகளிலும் அதிக அளவில் மெனக்கட்டு இருந்தால் இந்த வருட திரைப்பட ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான தீபாவளி போனஸ் ஆக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக அமைந்துள்ளது.